அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்கள் கவனத்திற்கு – கல்லூரிகள் திறப்பு, தேர்வு குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கமாக செயல்பட்டு வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எப்போது நேரடி வகுப்புகள் நடைபெறும் என்பது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன் பின் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மார்ச் 7-ம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 அணி விபரம்!
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எப்போது நேரடி வகுப்புகள் நடைபெறும் என்பது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கும் மார்ச் 16 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடப்பு செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள் ஜூன் 16 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN MRB மருத்துவத்துறையில் ரூ.1,12,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் செய்முறை தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்றும், அதேபோல் இறுதி செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அதன்பிறகு கல்லூரிகளில் கோடை விடுமுறை விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் அண்ணா பல்கலை கழகம் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now