தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புகார் குறித்த அறிவிப்பு!
மத்திய அரசின் இலவச உணவு திட்டத்தின் பயனை பெற முடியாதவர்கள் ஹெல்ப்லைன் எண் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி இது தொடர்பாக புகார்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
புகார் அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பயனர்களுக்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு பயனர்கள் தங்களுக்கு தேவையான உணவை இலவசமாக பெற்று பயனடையலாம். இப்போது, மத்திய அரசின் இந்த இலவச உணவுத் திட்டத்தின் கீழ் உணவு கிடைக்கவில்லை என்று சிலர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நீங்கள் கரிப் கல்யாண் திட்டத்துக்கு தகுதியுடையவராக இருந்து இதன் பலனை பெறவில்லை என்றால் ஆன்லைன் மூலம் புகார் அளிக்க முடியும். அதன்படி [email protected] என்ற இணையதளம் மற்றும் [email protected] மின்னஞ்சல் முகவரி மூலம் இது குறித்து பயனர்கள் புகார் அளிக்கலாம்.
மேலும், 1967 அல்லது 1800 425 5901 என்ற டோல்ஃப்ரீ எண்ணை தொடர்பு கொண்டும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவிர 04325665566, 04428592828 என்ற கட்டணமில்லா சேவைகளின் மூலமும் புகார் தெரிவிக்க முடியும். இல்லையெனில் பயனர்கள் ரேஷன் கார்டு எண்ணுடன் புகார் குறித்த கடிதத்தை எழுதி, ரேஷன் டிப்போவின் பெயரை குறிப்பிட்டு அதனை அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.