தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது சில இடங்களில் மிதமான மழைப்பொழிவும், மேலும் சில இடங்களில் அதிகனமழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் எனவும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி போன்ற மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல நாளையும் தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜூலை 15 முதல் ஜூலை 17 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், ஜூலை 15 ஆம் தேதி வரை கர்நாடகா, மத்திய, தெற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – முக்கிய உத்தரவு!
அதே போல நாளையும் தமிழக கடலோரம், மத்திய அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் எனவும், ஜூலை 15 ஆம் தேதியன்று கர்நாடகா, ஆந்திரா, மத்திய வங்கக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்