SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – போலி SMS எச்சரிக்கை!
சமீபத்தில் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் யோனோ கணக்கில் பான் எண்ணை உள்ளிடுமாறு செய்திகளை பெற்று வரும் நிலையில் இது ஒரு மோசடி என்று வங்கி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
SMS எச்சரிக்கை
இன்றைய கால கட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளின் சேவைகளும் இணைய வழியில் எளிதாக்கப்பட்டு விட்டது. இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், வேலைகளும் எளிதாகி விடுகிறது. இதற்கிடையில் வங்கி வாடிக்கையாளர்கள் அவ்வப்போது ஆன்லைன் சேவைகள் மூலம் ஃபிஷிங் மோசடிகளுக்குள் சிக்கி விடுகின்றனர். அந்த வகையில் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்வதன் மூலம் பல மோசடி சம்பவங்களை கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளனர். இதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களும் விதிவிலக்கல்ல.
IndiGo Airlines நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – B.Tech படித்தால் போதும்..!
இப்போது, பல SBI வங்கி பயனர்கள் தங்கள் பான் எண்ணை ஒரு எஸ்பிஐ வலைப்பக்க இணைப்புடன் புதுப்பிப்பதற்கான செய்தியை பெறுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு ஃபிஷிங் மோசடி என்று SBI வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, SBI வாடிக்கையாளர்கள் தங்கள் பான் எண்ணை கொடுக்கப்பட்ட இணைப்பில் புதுப்பிக்கவில்லை என்றால் அவர்களின் ‘யோனோ’ கணக்கு தடுக்கப்படும் என்று ஒரு குறுஞ்செய்தியை பெறுகிறார்கள். இந்த செய்தியில் உள்ள இணைப்பு உண்மையான இணையதளமாக சித்தரிக்கிறது. இது பயனர்களை முக்கியமான தகவல்களை உள்ளிடும்படி கேட்கிறது.
பயனர் தனது நற்சான்றிதழ்களை உள்ளிட்டால் ஹேக்கர்களுக்கு இரையாகிறார்கள். இது குறித்து SBI வங்கி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, ‘இது ஒரு நிலையான பிரச்சனை. இந்த ஃபிஷிங் தாக்குதல் வங்கிக் கணக்கை கையாள்வதால், இணைப்பைக் கிளிக் செய்து, முக்கியமான தகவலை உள்ளிட்டால், உங்கள் பணம் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம். மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும் மின்னஞ்சல்கள்/ SMS/ அழைப்புகள் ஆகியவற்றுக்கு பதிலளிக்க வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழக சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு – ரூ.18,000/- ஊதியம்..!
இப்போது SBI வங்கி நிறுவனம், பயனர் ஐடி, கடவுச்சொல், டெபிட் கார்டு எண், PIN, CVV மற்றும் OTP போன்றவற்றை ஒருபோதும் கேட்காது என்று விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதுபோன்ற ஃபிஷிங், ஸ்மிஷிங், விஷிங் தொடர்பான மோசடி முயற்சியை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகாரளிக்கலாம் அல்லது நடவடிக்கை எடுக்க 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இப்படி செய்தால் SBI வங்கியின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.