Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!
Post Office இல் சிறு சேமிப்பு திட்டம் மற்றும் பொதுவான சேமிப்பு திட்டம் ஆகிய திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி உயர்வு என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post Office திட்டம்:
இந்திய அஞ்சல் துறை நாட்டு மக்களுக்காக பல சிறப்பான நலத் திட்டங்களை செய்துகொண்டிருக்கிறது. மேலும், அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது. மேலும், வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் தான் கூடுதல் நன்மைகள் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் அஞ்சல் துறை திட்டங்களின் வட்டி விகிதமும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் 2022 – 23 நிதியாண்டிற்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, போஸ்ட் ஆபிஸ் திட்டங்களிலேயே மிகவும் முக்கியமான சிறு சேமிப்பு திட்டம் மற்றும் பொதுவான சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை பார்க்கலாம். அதாவது,தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு திட்டத்திற்கு ஆண்டுக்கு 4% வட்டி எனவும், புதிதாக கணக்கு துவங்கும் போது குறைந்தபட்ச தொகையாக ரூ.500 செலுத்த வேண்டும் எனவும், அதிகபட்ச வரம்பு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளையும் ஜூலை 24 வரை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!
மேலும், 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 5.8% வட்டி எனவும், குறைந்தபட்ச தொகையாக ரூ100 செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெபாசிட் கணக்குகளுக்கு 1, 2 மற்றும் 3 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 5.5% வட்டி விகிதம் எனவும், 5 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 6.7% வட்டி விகிதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதம் எனவும், மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு ஆண்டிற்கு 6.6% வட்டி விகிதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.