அனைத்து பள்ளிகளையும் ஜூலை 24 வரை மூட உத்தரவு – கொரோனா பரவல் எதிரொலி!
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வரும் ஜூலை 24 ஆம் தேதி வரைக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை:
இந்தியா முழுவதுமே கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்திலும் 15% க்கும் அதிகமான பொது மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மணிப்பூர் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், மணிப்பூர் மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூலை 16 ஆம் தேதி தான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்று பரவல் வீரியமடைந்து கொண்டிருப்பதால் ஜூலை 24 ஆம் தேதி வரைக்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை என முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார். மேலும், 12 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இன்னும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 21,566 பேருக்கு கொரோனா – ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!
மேலும், கொரோனா தொற்று வேகமாக பரவும் வேளையில் பள்ளிகள் செயல்பட்டால் குழந்தைகள் மூலமாக குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், தான் ஜூலை 24 ஆம் தேதி வரைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனாவின் வீரியத்தை கருத்தில் கொண்டு கட்டாயமாக பொதுமக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.