தமிழகத்தில் மின் பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்!

0
தமிழகத்தில் மின் பயனர்கள் கவனத்திற்கு - விரைவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்!
தமிழகத்தில் மின் பயனர்கள் கவனத்திற்கு - விரைவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்!
தமிழகத்தில் மின் பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்!

தமிழகத்தில் தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாக்குறுதி அளித்த படி ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாதம்தோறும் மின்கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர்:

தமிழகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். தற்போது இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை இது குறித்து மின் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்படுவதால் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கவே மாதந்தோறும் மின் கணக்கீடு முறை கொண்டு வரப்படுவதாக தெரிவித்தனர். தற்போதைய திமுக ஆட்சியில் மின்சார துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் மின் வாரியத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி மின் பயனர்களுக்குக்கென தனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்களாகவே தங்களின் மின் கட்டணத்தை அறிந்து கொள்ளலாம் . இந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் செயல்பட தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் எந்த நேரம் வேண்டுமானாலும் யாருடைய உதவியும் இல்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க முடியும்.

தமிழகத்தில் ஜூலை 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய உத்தரவு வெளியீடு!

மேலும் மின் கட்டணத்தில் நடைபெறும் முறைகேடுகளும் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதம்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது இறுதி செய்த பின் அனைத்து வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பருவமழை தொடங்குவதற்குள் புதைவட மின்கம்பி அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!