தமிழகத்தில் ஜூலை 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் இருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த வார வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்த வேலை வாய்ப்பு முகாமில் யார்யாரெல்லாம் கலந்து கொள்ளலாம், கல்வித் தகுதி குறித்தான அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, 8- ஆம் வகுப்பு தேர்ச்சி, 10- ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்றிந்தாலே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்பவரின் வயது 30க்குள் இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் ஜூலை 26 வரை விடுமுறை? முக்கிய உத்தரவு!
இதனால், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக சென்னை ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிசார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை இளைஞர்கள் தவறாது பயன்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.