LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – மானியம் குறித்த புதிய விதிகள்!
இந்தியாவில் சாமானிய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நிதியமைச்சர் சீதாராமன் இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு 200 ரூபாய் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிலிண்டர் மானியம்:
இந்தியாவில் கிராமப்புறங்களில் சமையல் எரிபொருளாக விறகு, நிலக்கரி, மாட்டு சாணம் உள்ளிட்டவை பயன்படுத்துவதற்கு பதிலாக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு இவர்களுக்கென்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு ‘பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 9 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இணைவதற்கு 18 வயது மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களாக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அத்துடன் இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் மானியத்தொகை வழங்கப்படும். ஆனால் கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. அத்துடன் சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டது. மேலும் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 2020ம் ஆண்டு பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இத்திட்டத்தில் உள்ள ஒரு சிலருக்கு மானியம் வழங்கப்பட்டது.
தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் LPG மானியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் கூறியதாவது, பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 மானியத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.6100 கோடி வரை அரசுக்கு செலவாகும் என்றும் கூறியுள்ளார். மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு சாமானிய மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.