PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – 12வது தவணை பணத்திற்கான அறிவிப்பு!
PM கிசான் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு தற்போது தான் 11 ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைத்தது. இந்நிலையில், 12 ஆவது தவணையை பெற விரும்பினால் கட்டாயமாக வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டம்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் அனைவருக்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஒரு வருடத்திற்க்கு மட்டுமே 6,000ரூபாய் வரைக்கும் நிதியுதவி வாங்கி பயனடைந்து வருகின்றனர். இது வரைக்கும் விவசாயிகள் 11 தவணைக்கான நிதியுதவியை பெற்றுள்ளனர். அதாவது, இந்த நிதியுதவி நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, 12 ஆவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், 12 ஆவது தவணைக்கான நிதியுதவி ஆதார் எண் அடிப்படையில் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், விவசாயிகள் கண்டிப்பாக PM .கிசானின் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ஆதார் விவரங்களை சரிபார்த்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும், ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணையும் கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 75 வது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா – முதல் நாள் ஒத்திகை!
அதாவது, விவசாயிகள் www.pmkisan.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை பதிவு செய்யவும். பின்பு, உங்களது மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படுகிறது. இந்த OTP எண்ணை பதிவு செய்து ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையத்தின் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். இந்த செயல்முறையை செய்து முடிக்காதவர்களுக்கு 12 ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்காது என வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.