சென்னையில் 75 வது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா – முதல் நாள் ஒத்திகை!
இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழாவினை கொண்டாட பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாராகி வருகிறது. இதற்காக தமிழகத்தில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்றது.
சுதந்திர தின விழா:
இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு என்றால் அது சுதந்திர தின விழா தான். அதாவது, நாட்டின் சுதந்திர தின விழாவானது அனைத்து மக்களாலும் ஒருசேர கொண்டாடப்படும் அரசு பொது விழா ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று 75 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினம் அரசு பொது விடுமுறையாக இருப்பதால் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்படும். மேலும் மாநில அளவில் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள்.
Exams Daily Mobile App Download
இந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக சென்னை கோட்டையில் கொடியேற்ற உள்ளார். மேலும் மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர தின விழாவை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த வருடம் கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.08) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு
இதற்காக இன்று ராஜாஜி சாலையில் ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமாண்டோ படை, குதிரை படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படை பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது, விருதுகள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடைபெற்றது. மேலும் ஒத்திகை நடைபெற்ற நேரத்தில் நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் அடுத்த ஒத்திகை நிகழ்ச்சி 11, 13ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.