தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளி நேரத்தை மாற்ற கல்வித்துறை முடிவு!

0

தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளி நேரத்தை மாற்ற கல்வித்துறை முடிவு!

தமிழகத்தில், இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை உரையில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால் பள்ளிகளில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்படும். இந்த திட்டம், ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய நேரம் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்கு பள்ளி நேரம் மாற்றம்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கி, தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் இன்று 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதல் அறிவிப்பாக மாணவர்கள் திறனை மேம்பாடு அடையச் செய்ய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வேளாண் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.31,000 ஊதியம்..!

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் அதற்கேற்ப பள்ளிகள் செயல்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் முன்னதாக பள்ளிகள் நேரம் மாற்றியமைக்கப்படும். இதன் அடிப்படையில் ஆரம்பம் முதல் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் கிராமப்புற பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, நகர்ப்புற பள்ளிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை செயல்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு தொடக்க நாளான ஜூன் 13ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தால் வரும் கல்வி ஆண்டில் 21 லட்ச மாணவர்கள் பயன்பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளிகளிலேயே ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!