மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் பயனாளிகள் கவனத்திற்கு – ரூ.6000க்கு மேல் நிதியுதவி பெற எளிய வழிமுறைகள்!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிகளுக்கு அதிகளவு நிதியுதவித் தொகை தேவைப்பட்டால் மற்றொரு வசதியை அரசு வழங்குகிறது. அதாவது இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் குறிப்பிட்ட அளவு கடன் தொகையை மலிவு வட்டி விகிதத்தில் பெறலாம்.
நிதியுதவி திட்டம்:
மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 11வது தவணைப்பணம் பிரதமர் நரேந்திர மோடியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் கீழ், சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்திற்குப் பிறகும் ரூ.2000 பணம் வழங்கப்படும். இந்த முதலீட்டில் கிடைக்கும் தொகையை விவசாயிகள் விவசாய உற்பத்திக்கு செலவிட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
அத்தகைய சூழ்நிலையில், ஒரு விவசாயிக்கு அரசு வழங்குவதை விட அதிகளவு பணம் தேவைப்பட்டால் அவருக்கு வேறு வசதி வாய்ப்புகளை அரசு வழங்கி வருகிறது. இதன் கீழ், பயனாளிகள் கிசான் கிரெடிட் மூலம் மலிவு வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இந்த கிசான் கிரெடிட் கார்டின் நன்மை என்னவென்றால், ஒருவர் மலிவான முறையில் கடன்களைப் பெற முடியும். இரண்டாவதாக இதன் கீழ் காப்பீட்டின் பலனும் கிடைக்கிறது. இப்போது நீங்கள் PM Kisan Yojana திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தால், pmkisan.gov.in என்ற வலைதளத்திற்கு சென்று விவசாயிகளுக்கான பகுதிக்கு செல்ல வேண்டும்.
Exams Daily Mobile App Download
அங்கு கிசான் கிரெடிட் கார்டின் படிவத்தைப் பதிவிறக்குவதற்கான விருப்பம், டவுன்லோன்ட் கேசிசி படிவம் என்று தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்யும் போது முதலில் எந்த வகையான கிசான் கிரெடிட் கார்டை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் மூன்று வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவதாக கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக கார்டு வரம்பை அதிகரிக்கவும், மூன்றாவதாக கிசான் கிரெடிட் கார்டு கணக்கை செயல்படுத்தவும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது, உங்கள் தேவைக்கேற்ப படிவத்தில் உள்ள விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் காப்பீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ள பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா என்ற விருப்பம் அந்த படிவத்தில் கிடைக்கும். இதன் மூலம், காப்பீடு செய்தால் ஒருவருக்கு தலா ரூ.2 லட்சம் கிடைக்கும். இந்த விருப்பத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் சமர்ப்பிக்கவும். அதன் பிறகு நீங்கள் நிலத்தின் உரிமையின் அடிப்படையில் கிசான் கிரெடிட் கார்டைப் பெறுவீர்கள். மேலும் கடன் தொகை அதனுடன் நிர்ணயிக்கப்படும். இதனுடன் ஏடிஎம் கம் டெபிட் கார்டு கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலையில் 4% அகவிலைப்படி உயர்வு?
இதை வைத்து கடன் தொகையை திரும்பப் பெறலாம். இந்த கடன் தொகையை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பாக சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்தினால், 4% வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது. இப்போது கிசான் கிரெடிட் கார்டைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், 155261 என்ற PM Kisan Helpline எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது தவிர, 18001155266 என்ற கட்டணமில்லா எண் மற்றும் 011-23381092, 011-24300606 என்ற லேண்ட்லைன் எண் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் இது குறித்த புகார்களை அளிக்கலாம்.