தமிழகத்தில் நாளை (ஜூன் 4 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூன் 4 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 4 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 4 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர் எஸ்.மடை, கீழக்கரை போன்ற பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் இணைப்பு துண்டிப்பு போன்றவை சரி பார்க்கப்படுகிறது. மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தற்போது ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் துணை மின் நிலையங்களில் உள்ள டவுன் ஒன்றில் மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தைக் காணலாம்.

Exams Daily Mobile App Download

அதாவது சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி பீடரில் மின் பாதை பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் காஞ்சிரங்குடி, கோரைகூட்டம், கல்லகுளம், செங்கள்நீரோடை ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் பயனாளிகள் கவனத்திற்கு – ரூ.6000க்கு மேல் நிதியுதவி பெற எளிய வழிமுறைகள்!

இதேபோல ஆர்எஸ் மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம், கழுகூரணி, குடிசை மாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரைக்கும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் உதவி சொற்பொழிவாளர் பாலமுருகன் அறிவித்துள்ளார். மேலும், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் உள்ள தங்கச்சிமடம் பீடரில் அவசரகால பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் செம்மமடம், மெய்யம்புளி, அரியாங்குண்டு, சந்தியாநகர், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் என ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!