Post Officeல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்குவோர் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

0
Post Officeல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்குவோர் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு!
Post Officeல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்குவோர் கவனத்திற்கு - வட்டி விகிதம் உயர்வு!
Post Officeல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்குவோர் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர்வு!

அஞ்சல சேமிப்பு திட்டங்களில் ஒன்று செல்வ மகள் சேமிப்பு திட்டம்,இது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில் வட்டி விகிதம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செல்வமகள் :

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் பெண் குழந்தை பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அஞ்சலத்தில் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த கணக்கை தொடங்கலாம். 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோருடன் சேர்ந்த கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். நீங்கள் சேமிக்கும் தொகையை முதிர்வு காலத்தில் 50% தொகையை குழந்தையின் மேற்படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம். அல்லது திருமணம் ஆகும் போதோ மேலும் 21 வயது நிறைவு பெறும் போது பெறலாம்.

Exams Daily Mobile App Download

இதில் முதலீடு செய்வோருக்கு வரி சலுகைகளும் உண்டு. மேலும் முதலீட்டுத் தொகை, வட்டி வருமானம் போன்றவற்றிற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ. 2500 முதலீடு செய்தால் ரூ.12,00,000 வரை முதிர்வு காலத்தில் கிடைக்கும். தற்போது இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை மாதம் முதல் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. பண வீக்கத்திற்கு மத்தியில் ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால், கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!

ஆனால் இந்த நேரத்தில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயரும். தற்போதைய நிலவரப்படி அதாவது அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50 முதல் 0.75% வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு, என்எஸ்சி ஆகிய அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும். ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30, 2022-ல் நிறைவடையும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான இந்த சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!