அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் வெளியீடு!
இந்திய குடிமகனின் குடியுரிமை சான்றாக ரேஷன் கார்டு உள்ளன. இந்நிலையில் இந்த அட்டை மூலம் சாமானிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
புதிய விதிமுறை:
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அத்தியாவசியப் பொருட்களை பயனாளிகள் மாதாந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு எடுத்துக் கொள்ளப்படுகிறது. உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (ரேஷன் கார்டு) பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
உணவு மற்றும் பொது விநியோகத் துறை அடிப்படையில், இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 86 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி பேர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றாலும் இதன் பலன்களைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷன் அட்டையின் பலனை பொருளாதார ரீதியாக வளமாக உள்ளவர்கள் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . இதைக் கருத்தில் கொண்டு பொது விநியோக அமைச்சகம் தரநிலைகளில் புதிய மாற்றங்களைச் செய்ய உள்ளது.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றப்படும், இதனால் எந்த குழப்பமும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உணவு மற்றும் பொது விநியோகத் துறை, தரநிலை மாற்றம் தொடர்பாக மாநிலங்களவையில் கூட்டம் நடத்தப்படுகிறது. மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளை இணைத்து புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தரநிலைகள் விரைவில் இறுதி செய்யப்படும். புதிய தரநிலை அமலுக்கு வந்த பிறகு தகுதியுடையவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள், தகுதியில்லாதவர்கள் பயன் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் உண்மையான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும்.