தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது கோவில்களில் வழக்கம் போல கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்ராயசுவாமி கோவில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 13ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக இந்த ஆண்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வழக்கம் போல திறக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் பேட்ராயசுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்ச்சியாக நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மாநிலத்தின் ஒரு சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தேரோட்ட திருவிழா நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் பேட்ராயசுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா வருகிற 13ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இவ்விழாவை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வருகிற 13ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்தும். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 30ம் தேதி அன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!