அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – 4 நாட்கள் விடுமுறை! முழு தகவல்கள் இதோ!’
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதால் இந்த நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடை விடுமுறை
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் காணப்பட்டு வரும் கொரோனா பேரலைத்தொற்றுக்கு மத்தியில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உள்ளிட்ட சில சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறைந்து வந்ததற்கு பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு வழங்கப்பட்டது. அதே போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியன்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 17% லிருந்து 31 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், நீண்ட நாட்களாக ஊதிய உயர்வு பெறாமல் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் கொடுக்கப்பட்டது. ஆனால், இது குறித்த நடவடிக்கை எதுவும் அரசு தரப்பில் இருந்து எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? நிதியமைச்சர் விளக்கம்!
இப்படி இருக்க இந்த நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வரும் ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை சென்னையில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது, தமிழக அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூன் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.