தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது? நிதியமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக வாய்ப்பே இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பல வதந்திகள் பரவியது. இந்நிலையில், நிதியமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்தான விளக்கம் ஒன்றை கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகவில்லை. இதற்கு நடுவே சட்டமன்ற கூட்டத்தின் போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து கருத்து முன்வைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், முதல்வர் அறிவித்த பின்னரே எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக சமூக வலை பக்கங்களில் வதந்திகள் பரவியது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் கொந்தளித்தனர். பல மாநிலங்களில் மீண்டும் பழையபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர்.
DIC-வில் காலியாக உள்ள PHP Developer பணியிடம் – Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்த மாநிலங்களை தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்திலும் விரைவில் அமல்படுத்தும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதியமைச்சர் பிடிஆர் இன்று விளக்கமளித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாக வாய்ப்பே இல்லை என நான் கூறவே இல்லை. தேவையில்லாமல் அறிக்கைகள் தான் வீண் வதந்திகளை பரப்பி கொண்டிருக்கின்றன என கடுப்பாகியுள்ளார்.