அனைத்து ரேஷன் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – கோதுமையின் அளவு குறைப்பு!
PMGKAY திட்டத்தின் கீழ் கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்திருப்பதாகவும், இந்த குறைக்கப்பட்ட அளவு ஜூன் மாதம் முதல் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கோதுமை குறைப்பு
மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாக ஜூன் மாதத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முன்பை விட யூனிட் ஒன்றுக்கு குறைவான கோதுமை கிடைக்கும். இந்த மாற்றம் பல மாநிலங்களிலும் சில யூனியன் பிரதேசங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் மே முதல் செப்டம்பர் வரை ஒதுக்கப்படும் கோதுமைக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்குப் பிறகு, PMGKAY திட்டத்தின் கீழ் பீகார், கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இலவச விநியோகத்திற்காக கோதுமை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர டெல்லி, குஜராத், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, மீதமுள்ள 25 மாநிலங்களின் கோதுமை ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விவாகரத்து சர்ச்சை குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை ரட்சிதா – ரசிகர்கள் ஷாக்!
இது குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள தகவலில், ‘மே முதல் செப்டம்பர் வரை மீதமுள்ள 5 மாதங்களுக்கு 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான PMKGAY அரிசி மற்றும் கோதுமை ஒதுக்கீட்டை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட கோதுமைக்கு அரிசி மூலம் இழப்பீடு வழங்கப்படும் என உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்போது கோதுமைக்கான கொள்முதல் குறைந்ததால் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து உணவுத்துறை செயலர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், ‘கூடுதலாக 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படும். அதே அளவு கோதுமையும் சேமிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த திருத்தம் PMGKAYக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் ஒதுக்கீடு செய்வது குறித்து மாநிலங்களுடன் விவாதம் நடந்து வருகிறது என்றும் சில மாநிலங்கள் NFSAன் கீழ் அதிக அரிசியை எடுக்க விரும்பினால், அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.