விவாகரத்து சர்ச்சை குறித்து மனம் திறந்த சீரியல் நடிகை ரட்சிதா – ரசிகர்கள் ஷாக்!
கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் கதாநாயகி ரட்சிதா மஹாலக்ஷ்மி, இந்த சீரியல் கதை கணவர் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நிலையில், தனது வாழ்க்கை கதை இது போல இருப்பதாக அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
நடிகை ரட்சிதா:
விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அறிமுகமான ரட்சிதா மகாலக்ஷ்மி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் மிர்ச்சி செந்திலிற்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் சீரியலை விட்டு அவர் விலகி இருக்கிறார். மேலும் கன்னட படம் ஒன்றில் அவர் நடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் கலர்ஸ் தமிழ் சேனலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் கதாநாயகி ரட்சிதா களமிறங்கி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அந்த சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக அவர் நடித்து வருகிறார். கணவர் இல்லாமல் அந்த குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றியும் அதில் சந்திக்கும் பல பிரச்சனைகளை பற்றியும் இந்த சீரியல் கதை இருக்கிறது. இந்நிலையில் ரட்சித்தாவிற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தினேஷ் உடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் நட்சத்திர ஜோடியாக சின்னத்திரையில் வலம் வந்தார்கள். இந்நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
அது குறித்து அவர்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது, இந்நிலையில் ரட்சிதா இது சொல்ல மறந்த கதை சீரியல் பற்றி பேசுகையில் இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும் தற்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரம் போல தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.