ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆதாருடன் வாக்காளர் பட்டியல் இணைப்பு! மத்திய அரசு அறிவிப்பு!
வாக்காளர் பட்டியலை ஆதாருடன் இணைப்பது, 18 வயது நிரம்பியவர்கள் ஆண்டுக்கு 4 முறை வாக்காளராக பதிவு செய்ய அனுமதித்தல் உட்பட 4 தேர்தல் சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பு:
தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்காக, ‘தேர்தல் திருத்தச் சட்டம் – 2021’, கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்தல் நடைமுறையில் 4 முக்கிய நடைமுறைகளை சேர்ப்பதற்கான 4 அறிவிக்கைகளை சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இதன்படி, ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும். அடுத்து, ஆண்டுதோறும் ஜன.,1 ல் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதன் பின் 18 வயது பூர்த்தியானோர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஓராண்டு காத்திருக்க நேர்கிறது. அதனால் இனி, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது. இதனால் ஓராண்டில் நான்கு முறை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம். மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக உறுப்பினர்கள், எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவைப் பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவர். அடுத்து, வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமையை அளிக்க, மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்படும்.
இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – நேற்று மட்டும் 13 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!
இதனால், சேவைப் பிரிவினரில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் ஓட்டு போட முடியும். இவற்றோடு, தேர்தல் தொடர்பான சாதனங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வைக்கவும், பாதுகாப்பு படையினர் தங்கவும் எந்த இடத்தையும் தேர்தல் கமிஷன் கோர, சட்டம் வகை செய்கிறது. இவ்வாறு தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.