9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்புகள்!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள், மீண்டுமாக பழைய பாடத்திட்டத்திற்கு திரும்பி இருக்கும் நிலையில் கோடை விடுமுறை நீட்டிப்பால் இழந்த நேரத்தை ஈடுகட்ட சனிக்கிழமைகளிலும் கூடுதல் வகுப்புகளை நடத்த திட்டமிட்டு வருகின்றன.
பழைய பாடத்திட்டம்
கடந்த சில வாரமாக நிலவிக் கொண்டு வரும் அதிகளவு வெப்பநிலை காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இப்போது விடுமுறை முடிவடைந்து அம்மாநிலத்தில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறை நீட்டிப்பால் இழந்த நேரத்தை ஈடுகட்ட சனிக்கிழமைகளிலும் கூடுதல் வகுப்புகளை நடத்த பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை முடிப்பதற்காக இழந்த நேரத்தை ஈடுசெய்யும் வகையில் கூடுதல் வகுப்புகளை அறிமுகப்படுத்துவதாக பல பள்ளிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FDக்கான வட்டி விகிதங்களில் மாற்றம்!
இப்போது 2023ம் ஆண்டு நடைபெறும் அனைத்து மாநில உயர்நிலைக் கவுன்சில், சிஐஎஸ்சிஇ மற்றும் சிபிஎஸ்இ ஆகியவற்றுக்கான ஆப்லைன் போர்டு தேர்வுகளால் மாணவர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சவுத் சிட்டி இன்டர்நேஷனல் கல்வி நிர்வாகம், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான கூடுதல் வகுப்புகளை வரும் ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடத்த முடிவு செய்துள்ளது.
அதே போல லக்ஷ்மிபத் சிங்கானியா அகாடமி மற்றும் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் தேவையின் அடிப்படையில் கூடுதல் வகுப்புகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளன. இது குறித்து செயின்ட் ஜேம்ஸ் பள்ளி முதல்வர் டெரன்ஸ் அயர்லாந்து கூறுகையில், ‘நாங்கள் நேரத்தை தவறவிட்டோம். இப்போது மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வருவதால் ஆசிரியர்கள் தானாக முன்வந்து கூடுதல் வகுப்புகளை எடுப்பது குறித்து முடிவு செய்வார்கள். குறிப்பாக 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு கூடுதல் வகுப்புகள் எடுக்கப்படலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.