தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அடுத்த கல்வியாண்டிற்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு!
தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டிருந்ததை தொடர்ந்து, 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான, ஆண்டு திட்டத்திற்கான அட்டவணையை (Annual planner) வெளியிட்டுள்ளார். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
தேர்வு தேதிகள் :
தமிழகத்தில் மே 25ம் தேதி அன்று சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23 வகையான சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
Exams Daily Mobile App Download
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , ஜூன் 13 ஆம் தேதி முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், ஜூன் 20 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கும், ஜூன் 27ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் எப்போது தொடங்கும் என்பதற்கான தேதிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கவும்..!
அதன்படி, 2022-23 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 3-ல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்புக்கு மார்ச் 14-ல் தொடங்குகிறது. 12-ம் வகுப்புக்கு மார்ச் 13-ல் தொடங்குகிறது என்பதை குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து வரும் புதிய கல்வியாண்டில் 210 வேலைநாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளது. வாரத்தில் 5 நாட்கள் பள்ளிகளுக்கு வேலை நாட்கள். சனிக்கிழமை பள்ளிகள் கிடையாது. தேவைப்பட்டால், சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்று கூறினார். ஜூன் 13 ஆம் தேதிக்குள் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது என்பதால் , அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.