கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 23 நேர்காணல்!
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகம் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் வேளையில் மக்கள் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை அளிக்க முன் வந்துள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அரசுத்துறை போட்டித்தேர்வுகளான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அடுத்த கட்டமாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அம்மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கான நேர்காணல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. நேர்காணல் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் நடைபெறும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு அமல்!
பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியரின் நன்னடத்தை சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பின் அதற்கான சான்று ஆதார் அட்டை, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது எடுத்து கொள்ள வேண்டும்.