மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு அமல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் சம்பள உயர்வு அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - விரைவில் சம்பள உயர்வு அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு அமல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்து அடுத்து ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு :

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரு முறை என இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. மேலும், வீட்டு வாடகைப்படி உயர்வும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31%லிருந்து 34 % ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

இந்நிலையில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும் பென்சனர்களுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி , அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR)ஆகியவற்றை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தாது. மேலும் 5 வது ஊதிய கமிஷன் மற்றும் 6வது ஊதிய கமிஷன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த உயர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 381 சதவீதத்தில் அகவிலைப்படி இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத்தொகை – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

இதற்கு முன்னர் அகவிலைப்படி 368 சதவீதமாக இருந்தது. ஐந்தாவது ஊதிய கமிஷன் பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், ஆறாவது ஊதிய கமிஷன் கீழ் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கெனவே இருந்த 196 சதவீதத்திலிருந்து 203 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வானது 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை செலவீனங்கள் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. இதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநில அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை இறுதியாக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!