தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டம் இலந்தைகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் தெருக்களில் வளர்ந்துள்ள உயரமான மரங்கள் மின் பாதைகளுக்கு இடையூறாக அமையும். அதனால் அவைகள் அகற்றப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்படும். இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து தற்போது மதுரை மாவட்டம் இலந்தைகுளம், ஐ.டி.பார்க் துணைமின்நிலையத்தில் நாளை ( 02.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், உத்தங்குடி, உலகநேரி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 4ம் அலை பரவல் எதிரொலி? 16, 464 பேருக்கு பாதிப்பு
அதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரன்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.