இந்தியாவில் கொரோனா 4ம் அலை பரவல் எதிரொலி? 16, 464 பேருக்கு பாதிப்பு!

0
இந்தியாவில் கொரோனா 4ம் அலை பரவல் எதிரொலி? 16, 464 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா 4ம் அலை பரவல் எதிரொலி? 16, 464 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா 4ம் அலை பரவல் எதிரொலி? 16, 464 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவின் அடுத்த அலை தொடங்கி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனாவின் தாக்கம் இன்றும் வரையும் குறையவில்லை. கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா முதல் அலையின் தாக்கத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல மக்கள் தங்கள் உறவினர்கள், பெற்றோர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நோயினால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர்.

Exams Daily Mobile App Download

மத்திய அரசு கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கொண்டு வந்த ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற நடவடிக்கைகளால் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். நாட்டில் வேலையின்மை, விலைவாசி அதிகரித்ததால் மக்கள் அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலைக்கு ஆளாகினர். தற்போது தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொற்று குறையத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனாவின் நான்காம் அலை தொடங்கிவிடும் என அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

அந்த வகையில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 16,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,396 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து ஒரே நாளில் 16,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக உலகின் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,33,65,890ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 98.48% ஆகவும் உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆகவும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.33% ஆகவும் உள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,04,34,03,676 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாகவும், நேற்று ஒரு நாள் மட்டும் 8,34,167 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!