தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகல் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
நாட்டில் மின்சார தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் மின் உற்பத்தியை பெருக்குவது குறித்த பல திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் அனைத்து வேலைகளுக்கும் மின் தேவை என்பது அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இதனால் மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்று அனைத்து நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
Exams Daily Mobile App Download
மின்சாரத்தை உற்பத்தி செய்வதை விட அதனை சரியான வழியில் மக்களுக்கு கொண்டு செல்வது தான் கடினமான ஒன்றாகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மாநிலங்கள் மற்றும் மாவட்ட வாரியாக அந்தந்த துணை மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது பணியில் ஈடுபடும் மின் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மின்தடை செய்யப்படுகிறது. மேலும் மின்கம்பங்கள் சேதம், மின் வயர்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் நினைவுச் சின்னங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை( ஆகஸ்ட் 4) வியாழக்கிழமை மங்களம், பூமலூர், மலைக்கோவில், பள்ளிபாளையம், அக்ரஹாரபுதூர், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாதுரைப்புதூர், வேலாயுதம்பாளையம் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின் செயற்பொறியாளர் கே.ஆர்.ஆர். சபரி ராஜன் தெரிவித்துள்ளார்.