இந்தியாவில் நினைவுச் சின்னங்களை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்தாண்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நினைவு சின்னம்:
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டுக்காக ரத்தம் சிந்திய வீரர்களையும் உயிர் தியாகம் செய்தவர்களையும் நினைவு கூறும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டு நாட்டின் 75 – வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தாண்டு அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15 ஆம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வீடுகள் மட்டுமில்லாது அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் ஆகஸ்டு 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் சமூக வலைதள பக்கங்களில் மூவர்ண கொடியை காட்சிப்படமாக வைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வீரத்தைப் போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி வார விழா கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஆக. 3) முதல் பார்சல் சேவையை தொடங்கிய SETC – கட்டணம் குறித்த விவரங்கள்
இந்த பணிகளை தொடர்ந்து ஆகஸ்ட் 5 முதல் 15-ம் தேதி வரை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் இலவசமாக நினைவு சின்னங்களை பார்வையிட்டு மகிழலாம். இந்தியாவில் ஏராளமான நினைவு சின்னங்கள் உள்ளது. ஒவ்வொரு இடமும் பிரபலமானவை தற்போது அவைகளை மக்கள் கண்கொண்டு களிக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.