தமிழகத்தில் இன்று (ஆக. 3) முதல் பார்சல் சேவையை தொடங்கிய SETC – கட்டணம் குறித்த விவரங்கள்!

0
தமிழகத்தில் இன்று (ஆக. 3) முதல் பார்சல் சேவையை தொடங்கிய SETC - கட்டணம் குறித்த விவரங்கள்!
தமிழகத்தில் இன்று (ஆக. 3) முதல் பார்சல் சேவையை தொடங்கிய SETC - கட்டணம் குறித்த விவரங்கள்!
தமிழகத்தில் இன்று (ஆக. 3) முதல் பார்சல் சேவையை தொடங்கிய SETC – கட்டணம் குறித்த விவரங்கள்!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் புதிய சேவையை இன்று (ஆகஸ்ட் 3 ) முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. மேலும், 80 கிலோ எடையுள்ள பார்சலை அனுப்ப, 18 சதவீத ஜிஎஸ்டியை தவிர்த்து ஒருவர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முழு விவரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது.

பார்சல் சேவை:

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) தனது நிதி நிலையை வலுப்படுத்த கட்டணமில்லா வருவாய் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் பார்சல் சேவையை இன்று (ஆகஸ்ட் 3) முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. அதன்படி, பேருந்தில் உள்ள சுமைப் பெட்டிகளுக்கு, மாதம் ஒருமுறை மற்றும் தினசரி வாடகை அடிப்படையில் பார்சல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து மற்றும் லாரியை விட அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் கட்டணம் குறைவாகவும், அதே நேரத்தில் பார்சல் ஒரேநாளில் சென்றடையும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

SETC அதிகாரிகளின் கூற்றுப்படி, பேருந்தில் உள்ள மூன்று லக்கேஜ் பெட்டிகளில், இரண்டு பெட்டிகள் பயணிகளுக்காக ஒதுக்கப்படும், மீதமுள்ள ஒன்று பார்சல் மற்றும் கொரியர் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வரும் பார்சலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய புதிய வசதி – தகவல் வெளியீடு

மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு அனுப்பப்படும் பார்சல் 80 கிலோ எடையை கொண்டிருந்தால் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டியை தவிர்த்து கட்டணம் வசூலிக்கப்படும். அதன் படி, திருச்சி மற்றும் ஓசூரிலிருந்து இருந்து சென்னைக்கு அனுப்ப ஒருவர் ரூ.210 செலுத்த வேண்டும். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியிலிருந்து பார்சல் அனுப்ப ரூ.390 ஆகவும், மதுரையிலிருந்து பார்சல் அனுப்ப ரூ.300 ஆகவும் இருக்கும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளது. மேலும் தகவலுக்கு, SETC இன் கோயம்புத்தூர் கிளை மேலாளரை 94450-14435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!