சென்னையில் ஜூன் 5ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை பிரதான பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஜூலை 5ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் விபத்துகளை தடுக்கவும், மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கவும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மாற்றுதல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் தெருக்களில் வளர்ந்துள்ள உயரமான மரங்கள் மின் பாதைகளுக்கு தடையாக இருக்கும். அதனால் அவைகள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் சென்னையில் மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையார், வியாசர்பாடி, கே.கே நகர் ஆகிய பகுதி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் முண்டக்கண்ணியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் கோயில் தெரு, அப்பாதுரை கோயில் தோட்டம் ராமனுஜம் தெரு, முனியப்பா தெரு, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு, துளசிங்கம் தெரு ஆகிய பகுதிகளிலும் தாம்பரம் பகுதியில் உள்ள மாடம்பாக்கம் வேங்கைவாசல், இந்திரா நகர், ஜி.வி நகர் பெரும்பாக்கம் மூவேந்தரா தெரு, அம்பேத்கர் தெரு, கஜேந்திரன் நகர், ராம் கார்டன் ஈ.டி.எல் ஐஐடி காலனி பகுதி ஆறுமுகம் நகர் பகுதி, வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று செய்யப்படும்.
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
அதனை தொடர்ந்து கிண்டியில் மடிப்பாக்கம் தனகல் சாலை, குளக்கரை தெரு நந்தம்பாக்கம் வன்னியர் தெரு, ராமசந்திரா நகர், ஆகிய பகுதிகள். அதே போல ஆவடி பகுதியில் திருமுல்லைவாயில் சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் ஐஐடி காந்தி மண்டபம் ரோடு, நாயுடு தெரு, கொட்டூர்புரம் குடியிருப்பு மற்றும் திருவள்ளுவர் நகர், பஜனை கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், பல்லவன் நகர், ஈ.சி.ஆர் ரோடு, ராஜீவ் அவென்யூ திருவான்மியூர் கண்ணப்பா நகர், ஸ்ரீராம் அவென்யூ, சுவாமிநாதன் நகர், சுப்பிரமணி தெரு ஆகிய பகுதிகள் கே.எம்.ஏ கார்டன், கே.ஏ கோயில், தென்றல் நகர். திருத்தங்கல் நகர் அசோக் நகர், சின்மயா நகர் சாய் நகர் அனக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சின்மையா நகர் பகுதி, காந்தி தெரு, வாரியர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.