தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 8) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மதுரை மாவட்ட வலையன்குளம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 8) மாதாந்திர பணியின் நிமித்தம் காரணமாக மின்தடை செய்யவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
மின்தடை அறிவிப்பு
மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும்.
தமிழகத்திற்கு இன்று ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!
அவ்விதமாக நாளை (ஆக.08) வலையன்குளம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதாவது மதுரை மாவட்ட வலையன்குளம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின்நிலையத்தில் திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியின் நிமித்தம் அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரமும் கீழ் வருவன.
Exams Daily Mobile App Download
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:
வலையன்குளம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களுக்கு நாளை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.