தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பரமக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதற்கான காரணங்கள், மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது.
தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை? முதல்வர் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
ரயில்வே துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்?
இந்நிலையில் தற்போது பரமக்குடி மாவட்டத்தில் நாளை ஏப்ரல் 9 அன்று மின் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9 மணியில் தொடங்கி மதியம் 2 மணி வரையிலும் பரமக்குடி நகர், எமனேஸ்வரம், மஞ்சூர், கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லூர், பெருமாள் கோவில், பாலன் நகர், மின்தடை ஏற்படும் என பரமக்குடி மாவட்ட மின் வாரிய சொற்பொறியாளர் ஜி. கங்காதரன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.