ரயில்வே துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்?
ரயில்வே துறை வாரியமானது தனது பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DA உயர்வுடன் நிலுவை தொகையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
ரயில்வே ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுசெய்ய அரசு தன் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம், அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க அவர்களுக்கு உதவ தொடர்ந்து உயர்த்தப்பட வேண்டும். மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு முறை டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தி வழங்குகிறது. நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் வேலை செய்வதை பொறுத்து அனைத்துப் பணியாளர்களுக்கும் DA மாறுபடும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை 3% உயர்த்தி 345 ஆக அறிவித்தது. மத்திய அரசின் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவியப்பு பொருந்தாது. அரசின் ரயில்வே திரை மற்றும் பாதுகாப்பு துறை ஊழியர்களுக்கு என்டறு அந்தந்த துறைகளின் சார்பில் தனியாக அறிக்கைகள் வெளியிடப்படும். அந்த வகையில் ரயில்வே துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. DA 3% உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த சம்பள உயர்வானது ஜனவரி1, 2022 முதல் அமலுக்கு வரும் என்றும், இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்வே வாரிய துணை இயக்குநர் ஜெய் குமார் அனைத்து மண்டலங்களுக்கும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 30 ஆம் தேதி வரையிலான நிலுவை தொகையுடன் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.