சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது RSETI Center at SEONI, Counselor for FLCC BALAGHAT and Director பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா |
பணியின் பெயர் | RSETI Center at SEONI, Counselor for FLCC BALAGHAT and Director |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
RSETI Center at SEONI, Counselor for FLCC BALAGHAT and Director பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
Director கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BSW/BA/B.Com பட்டதாரி / முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அதிகாரி கேடரில் இருக்க வேண்டும்.
பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Director தேர்வு செயல் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மேலும் இது தொடர்பான வங்கியின் முடிவே இறுதியானது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கொடுக்கப்பட்ட வடிவத்தில் (இணைப்பு-A) சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி 22.04.2022 பிற்பகல் 3:00 மணிஆகும். பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு அப்பால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. முழுமையடையாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.