தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 13) துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழ்நாட்டில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகளுக்காகவும் மின்கம்பியில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவை இல்லாத மரங்களை போக்குவதற்காகவும் பராமரிப்பு பணிகள் மின் வாரியம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின்நிலையகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்த மின்தடை காலை 9 மணி முதல் 5 மணி வரை இருக்கும். இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஃபார்முலாவின் படி DA தொகை – கணக்கீடு விவரங்கள் இதோ!
அதுவும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அம்மாவட்ட மின் வாரியம் சார்பில் அறிவிப்புகள் சென்றுவிடும். அதனை பயன்படுத்தி மக்கள் தங்களது வேலைகளை விரைவில் செய்து விடுவார். இது தவிர நெடுஞ்சாலை பணிகள் மற்றும் சாலை பராமரிப்பு பணிகளை காரணம் காட்டியும் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்நிலையில் தற்போது விருதுநகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், வைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு, ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம் , செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நரையன்குளம், ஒத்தப்பட்டி, வாழைக்குளம், காந்திநகர், இடையன்குளம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.