தமிழகத்தில் ஏப்ரல் 14 முதல் 4 நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 14, 15, 16 மற்றும் 17 என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் – முக்கிய தகவல் வெளியீடு!
பொதுத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாணவர்களும் தீவிரமாக தங்களது பாடங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே பல அரசு விடுமுறைகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையும் விடுமுறையாக இருந்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை இருக்கும் என பள்ளி மாணவர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் சேர்த்து மொத்தமாக நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14, 15, 16 மற்றும் 17 என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விடுமுறை முடிந்து ஏப்ரல் 18-ஆம் தேதி வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.