தமிழகத்தில் 4 நாட்கள் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் 4 நாட்கள் மின்தடை செய்ய இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
நாடு முழுவதும், கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் பொதுமக்களின் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்,மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் தேவை உச்சபட்சமாக 14 ஆயிரம் மெகாவாட் இருந்த நிலை மாறி இப்போது 17,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன்பாட்டில் உள்ளது. இது இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று முன்னதாக மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதாக மின்வாரியத்துக்கு புகார்கள் வருகின்றன.
Exams Daily Mobile App Download
இதற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். இந்த மின்தடை அறிவிப்பு பற்றிய தகவல் முன்னதாகவே உதவி செயற்பொறியாளருக்கு அறிவிக்கப்படும். மேலும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் இருக்கும். இந்த வகையில் கமுதி அருகே செங்கப்படை வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் உலகநடை, பாம்புல் நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்கள் மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் செங்கப்படை வழித்தடத்தில் உள்ள உலகநடை, பாம்புல் நாயக்கன்பட்டி, செங்கப்படை, புதுக்கோட்டை, இடையங்குளம், தோப்படைப்பட்டி, கோவிலாங்குளம், ஊ.கரிசல்குளம், எருமை குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 1, 3, 7, 9 உள்ளிட்ட தேதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.