தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை மாவட்டத்தில் தாம்பரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 1) அன்று நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என சென்னை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
மின்சாரம் என்பது ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தமிழகத்தில் மின்சார துறையில் பல சீர்திருத்தங்களை சரி செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக அரசானது மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இருக்கும் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்த பணிகளை செய்யும் போது ஊழியர்களுக்கும், மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்விநியோகத்தை தடை செய்து பணியை தொடருவார்கள். அவ்விதமாக நாளை திங்கட்கிழமை சென்னை தாம்பரம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடையாகும் என்று சென்னை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இனி அரசு பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை – வலுக்கும் எதிர்ப்புகள்
அந்த செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது, நாளை ஆகஸ்ட் 1ல் தாம்பரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நடைபெறவிருக்கும் பராமரிப்பு பணி காரணமாக சிட்லப்பாக்கம் முதல் மெயின் ரோடு, சுப்பிரமணியன் தெரு, ராமசந்திரா சாலை, பத்பநாபன் தெரு, ஐய்யாசாமி தெரு, ஜோதி நகர் 3-வது தெரு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் எனவும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின் வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
I love jop in my work