பழைய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள் கிடைக்கவுள்ளதா? மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது விரைவில் அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (ஒபிஎஸ்) பலனை, அரசு வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழைய ஓய்வூதிய திட்டம்:
2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பலன்கள் குறைவாக உள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அரசிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை கோரி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், சட்ட அமைச்சகத்தின் பதிலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, மத்திய அரசு இந்த விவகாரத்தை சட்ட அமைச்சகத்தின் கீழ் வைத்துள்ளது. ஜனவரி 01, 2004 அன்று அல்லது அதற்கு முன் யாருடைய ஆட்சேர்ப்புக்கான விளம்பரம் வெளியிடப்பட்டதோ அந்த ஊழியர்களை NPS வரம்பில் இருந்து விலக்குவது குறித்து நிதிச் சேவைகள் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலன் (DoP&PW) சரியான முடிவை எடுக்கலாம் என கூறினார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக 19 ஆண்டுகளாக போராடி வரும் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் பெரிய பலன் கிடைக்கும் என்று கூறினார். இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் மத்திய ஆயுதக் காவல் படைக்கு கிடைக்காது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிகள் 1972ன் கீழ் துணை ராணுவப் பணியாளர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளைப் பெறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.