தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தற்போது நடைமுறையில் உள்ள கைரேகை பதிவிற்கு பதில் கண் கருவிழி பதிவு முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
கண் கருவிழி பதிவு:
தமிழக ரேஷன் கடைகளில் முதலில் மாதந்தோறும் பொருட்கள் வாங்கும் போது உரிய பதிவேடுகளில் பதிவு செய்த பின்னர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த முறையில் அதிக கால வியரம் ஆனது. இதனை தவிர்க்க பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் கை ரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்று செல்லலாம். இந்த முறையை செயல்படுத்த முதலில் ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பிறகு குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் எண் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில் இந்த முறை சிறப்பாக செயல்படுத்தபட்டது. ஆனால் தற்போது இந்த பயோமெட்ரிக் முறையில் பல இடர்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் கைரேகை பதிவாகுவதில்லை. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை தர மறுக்கின்றனர். குறிப்பாக வயதானவர்களுக்கு விரல் கைரேகை பதிவாகுவதில்லை. மேலும் அடிக்கடி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு இந்த பயோமெட்ரிக் முறையில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு பல்வேறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில் தற்போது ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படவுள்ளது. இந்த கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத்திட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயோ மெட்ரிக் முறைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.