நாளை (ஏப்ரல் 28) மாவட்டங்களுக்கான பொது விடுமுறை அறிவிப்பு – பிரதமர் வருகை எதிரொலி!

0
நாளை (ஏப்ரல் 28) மாவட்டங்களுக்கான பொது விடுமுறை அறிவிப்பு - பிரதமர் வருகை எதிரொலி!
நாளை (ஏப்ரல் 28) மாவட்டங்களுக்கான பொது விடுமுறை அறிவிப்பு - பிரதமர் வருகை எதிரொலி!
நாளை (ஏப்ரல் 28) மாவட்டங்களுக்கான பொது விடுமுறை அறிவிப்பு – பிரதமர் வருகை எதிரொலி!

பாரத பிரதமர் மோடி நாளை (ஏப்ரல்.28) அசாம் மாநிலத்திற்கு வருகை தர இருக்கும் நிலையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இதனிடையே மோடியின் வருகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி விடுமுறை

முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அசாம் மாநில அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு நாளை (ஏப்ரல்.28) ஒரு நாள் மட்டும் திப்ருகர் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்களுக்கு பொது விடுமுறையை அளித்துள்ளது. அந்த வகையில் மோடியின், மாநில வருகையைக் கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் வேளையில், மோடி நாளை நடைபெறும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள திபுவில் ‘அமைதி, ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு பேரணியில்’ பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் – ஆதார் இணைப்பு கட்டாயம்! முழு விபரம் இதோ!

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாநில கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பிறகு, அவர் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள அசாம் மருத்துவக் கல்லூரியின் புற்றுநோய் மருத்துவமனையை துவங்கி வைக்க இருக்கிறார். பின்னர், திப்ருகரில் உள்ள கானிகர் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அங்கு அவர் 6 புற்றுநோய் மருத்துவமனைகளை பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, 7 புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக, அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்வுகள் நடைபெற இருக்கும் மாவட்டத்திற்கு வந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28 ஆம் தேதி அசாமின் தீபுவுக்கு வருகை தருவார் என்றும், அங்கு கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் அறிவித்துள்ளார். இப்போது மோடியின் வருகையை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி ஆங்லாங் மற்றும் திப்ருகர் மாவட்டங்களுக்கு நாளை (ஏப்ரல்.28) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!