ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் – ஆதார் இணைப்பு கட்டாயம்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால் சாதாரண மக்களுக்கு உதவும் வகையில் 5 மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலவச ரேஷன்
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு வகையான தொழில்களும் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் காரணமாக சாதாரண மக்களுக்கு தங்களின் அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. அத்துடன் ஒரு வேளை உணவு உண்ண கூட வழி இல்லாமல் தவித்தனர்.
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – ராணிப்பேட்டையில் தனியார் முகாம்!
அதனால் மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு தங்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் முறையிலும் நேரடியாகவும் செய்ய முடியும்.
தற்போது நேரடி முறையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
1. முதலாவதாக இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கிக் பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை பெற்றிருக்க வேண்டும்.
2. குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் அலுவலகம் அல்லது பொது விநியோக அமைப்பு கடையில் சமர்ப்பிக்க வேண்டும்.
3. இப்போது ஆதார் தரவுத்தளத்தில் நீங்கள் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.
4. இறுதியாக அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு தங்களின் ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செய்தி உங்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.