தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் எந்த ஒரு திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இதுமட்டுமில்லாமல் திருமண நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் சென்ற வருடம் இறுதியில் இருந்து தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது. இது தவிர அந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதற்கான தேதியையும் தெரிவித்து உள்ளனர். இதனால் மாணவர்களும் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போன் நம்பரை இணைப்பது எப்படி? வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் தற்போது அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 18 ஆம் தேதி அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவிக்கப்படுகிறது. மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு இது பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளதால், அதனை ஈடு செய்யும் பொருட்டு, அடுத்த மாதம் மே 7ஆம் தேதி அன்று முழு வேலை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்த பணியாளர்களை கொண்டும் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.