தமிழகத்தில் ஏப்.16ம் தேதி ‘இந்த’ மாவட்டத்திற்கு விடுமுறை – என்ன காரணம்?

0
தமிழகத்தில் ஏப்.16ம் தேதி 'இந்த' மாவட்டத்திற்கு விடுமுறை - என்ன காரணம்?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி ஆன நாளை குறிப்பிட்ட மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உள்ளூர் விடுமுறை:

திருச்சியில் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த ஞாயிறு முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் அஷ்டபுஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக சிவப்பதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் சுவாமி எழுந்தருளியுள்ளார். திருவிழாவின் நிகழ்வுகளாக ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று வெள்ளிக் குதிரை வாகன உலா, பின்னர் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஏப்ரல் 16ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

SPMCIL நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் வேலை – B.E தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

இதனால் திருச்சி மாவட்ட மக்கள் விழாவில் கலந்து கொள்ளும் வகையில் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஜூன் எட்டாம் தேதி அன்று வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!