தமிழக மக்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு.. உஷார் மக்களே – அதிகாரப்பூர்வ தகவல்!
இந்திய வானிலை ஆய்வு மையமானது தமிழகத்தில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு நிலவும் வெப்பநிலை குறித்தான எச்சரிக்கை அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு:
தமிழகத்தில் நடப்பு ஆண்டு வழக்கத்தை விட அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. கோடைகாலத்தின் ஆரம்பத்திலேயே இந்த அளவு வெப்பம் இருப்பதால் இனிவரும் அக்னி நட்சத்திரம் போன்ற நாட்களில் வெப்பநிலையை நினைத்து மக்கள் அச்சப்பட தொடங்கியுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையமானது தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
குறிப்பாக 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் தமிழகத்தில் லேசான மலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை கருத்தில் கொண்டு மக்கள் வெயில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும், போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரமான முறையில் தங்களை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.