6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரகண்ட் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தால் உயர் வகுப்புகளுக்கு மட்டும் முன்னதாக பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் அனுமதியளித்தது.
தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
உத்தரகண்ட் மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அமைச்சரவையில் 6 முதல் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு:
ஆனால் கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், வரும் ஏப்ரல் 15ம் தேதி முதல் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
அரசு பள்ளிகளை திறக்க அனுமதியளித்தாலும் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வெளியிட்டு பள்ளிகளை அவற்றை முறையாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைளை முறையாக கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்