தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
கிராம உதவியாளர் பணிக்கு 5 காலியிடங்கள் இருப்பதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 5 கிராம உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. தற்போது அந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீரலப்பட்டி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர்களில் ஒருவர் தேர்தெடுக்கவுள்ளனர். கோதையுறும்பு முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு பணியிடமும், பொருளூர் பொது பிரிவினர்களில் உள்ள பெண்களில் ஒருவருக்கும், மண்டவாடி பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம் பெண்களுக்கு மட்டும் ஒரு பணியிடமும், கூத்தம்பூண்டி பொதுப்பிரிவினருக்கு ஒரு பணியிடமும் வழங்கப்படவுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான விடுமுறை பட்டியல்!
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.07.2022 ன் படி குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 32 வயது இருக்கலாம். SC, SCA, ST, BC, BC(Muslim), MBC, DNC ஆகிய பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயது இருக்கலாம். விண்ணப்பதாரருக்கு கண்டிப்பாக மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது பணியிடம் காலியாக உள்ள கிராமங்கள் மற்றும் 2 கிலோமீட்டர் அருகாமையில் எந்த பணியாட்களும் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்ட அளவில் உள்ள தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து 15 நாட்களுக்குள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.