TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்னும் 8 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் இருந்த நிலையில் சர்வர் பிரச்சனை காரணமாக பலரால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு வரும் ஏப்ரல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டிருக்கின்றன.
TN TET தேர்வு
தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 7ஆம் தேதி வெளியானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
கடந்த 2 வருடமாக தகுதித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரிகளும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றன. இதனால் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. அத்துடன் விண்ணப்பத்தார்களுக்கான OTP எண் சென்றடையவில்லை. முதலாம் ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகததால் அவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை காரணமாக தரப்பினர் அனைவரும் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.